கவிதை என்பது கலையின்
உச்சக்கட்டமா.....?
அல்லது கலைஞனின்
முதற்கட்டமா ....?
மனிதனின் சிறிய சிந்தனையில்
கண்ணியமான கற்பனையை
சிந்துவதா....?
காதலின் கசிவா அல்லது
கன்னியின் கதையா ..?
ஆன்மீகத்தின் நாட்டமா அல்லது
அண்ட முகடின் கருவூலமா ..?
கவிதையின் கருத்தை
மனிதனால் மறுக்கமுடியாதோ ..?
