Friday, October 22, 2010

நண்பன் சொன்னது ......

உன் சோகத்தால் மற்றவர்களை காயப்படுத்தாதே..!
சோகத்தில் இருக்கும் போதும் சிரித்துக்கொண்டே இரு
உன் சிரிப்பை எதிர்பார்த்து சிலர் இருப்பர்
அவர்களின் சிரிப்பை போக்கிடாதே.....!

Wednesday, October 20, 2010

இதுவரை பார்த்ததில்லை...!

உலக அதிசயங்கள் அனைத்தும் என் கண் முன்னே
அழகின் மறுபக்கம் என் கண்ணுக்குள்ளே
கருவிழிகளின் கண்ணயரா நடனம்
உடல் உறுப்புகளின் நினைவின்மை
இதயத்தின் இனிய  இயக்கம்  
இதுவரை பார்த்ததில்லை 
பார்க்காததை பார்த்ததினாலோ...?

Thursday, October 14, 2010

உலகம் ...

 நீ சிரிக்கும் போது
 உன்னுடன் சேர்ந்து சிரிக்கிறது
 உலகம் .     
 நீ அழுகும் போது
 உலகம் உன்னை பார்த்து  சிரிக்கிறது.

  உலகத்திற்கு சிரிக்க மட்டுமே தெரியும்
  நீ துன்பத்தில் இருக்கும் போதும்,
  இன்பத்தில் இருக்கும் போதும்.

 உன்னை நீ மாற்றிக்கொள்                                                      
எப்போதும் சிரிப்பவனாக .....!!!

Tuesday, October 12, 2010

வழிகாட்டியே.....

உணர்வில்லாமல்  உணர்ந்தேன்....
                           தாய் எனக்கு உலகத்தை முதல் முறையாய்
                          அறிமுகபடுத்தியப்போது ...
அறியாமல் அறிந்தேன் ....
                          ஆசிரியர் எனக்கு இதுதான் உலகம் என
                          சுட்டிக்காட்டியபோது ...
தெரியாமல் தெரிந்தேன் ...
                           நண்பன் எனக்கு இப்படிதான் உலகம் என
                           தெரியபடுத்தியப்போது ...

புரியாமல் புரிந்தேன்....
                          காலம் எனக்கு இதுதான் சோகம் என
                          புரியப்படுத்தியபோது ...
உறையாமல் உறைந்தேன் ....
                         விழியின் வலியை போக்கி நீங்கள் எனக்கு
                          வழிக்காட்டியப்போது....

Monday, October 11, 2010

காதலும் நட்பும் ....

நான் என் நண்பர்களை  நேசிக்கிறேன் ...
அவர்களின்   நட்பை காதலிக்கிறேன் ....
ஹயா...........
                 நானும் காதலிக்கிறேன் ...!!!!

Friday, October 8, 2010

இன்றைய செய்திகள் ........

என்னடா வலைபதிவு ஆரம்பித்து விட்டோமே எதுவுமே எழுதவில்லையே என்று வெகு நாட்களாக சிந்தித்து  கொண்டிருக்கும் வேளையில் சட்டென்று  எனுக்கு எதுவுமே தோன்றவில்லை ....
                                
                  என்னவென்று புரியவில்லை..
                     நீண்ட நாட்களாக எதுவும் எழுதவில்லை..
                        காரணம் தெரியவில்லை ..
                            யாரும் அறியவில்லை..                                                  
                                ஏன் இந்த பிள்ளை ....
                                   இப்படி என்று யாரும் கூறவில்லை ..
                                      என்ன ஆனது  என தெரியவில்லை
                                          இப்படி எல்லாம் எழுத தோன்றுகிறது.....
                                               நிகழ் காலத்திற்கு நன்றி...............!!!